இலைகள் உதிர்கின்றன

ஒவ்வோர் இலைக்கும்
ஓர் இலை காத்திருக்கிறது..
முத்தமிட நகருமிலை
வெட்கம் கொண்டதாகவே
தெரிகிறது..
மரக்கிளை தாங்கிய
கூடொன்றில்
முத்தமிட்டுக்கொள்கிறது
இரு பறவைகள்..
இரண்டு பறவைகளிலிருந்தும்
மறைந்துக்கொள்ள முயலும்
இலைகளிரண்டும்
தோல்வியில் தலை குனிகின்றன..
வெட்கம் என்று
மீண்டும் மீண்டும்
பொய் சொல்லப்படுகிறது..
பொய்கள் என்பது
என்னவெனில்
இதுவே ஆகுமென
முடித்துவிட்ட ஒருவன்
நிசங்களில் தொலைந்துவிட்டதாக
மீசை முறுக்கிக்கொண்டிருக்க
இலைகள் உதிர்கின்றன..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (5-Jul-15, 5:43 pm)
பார்வை : 94

மேலே