நீ வாழும் உலகிலே நான் வாழ்ந்தால் போதும்
நீ நடந்த பாதையின்
சுவடிருந்தால் போதும்
நான் நடந்த பாதையின்
வழி மறந்து போகும்
நீ பார்த்த பார்வைகள்
நினைவிருந்தால் போதும்
என் நிலவுக்கு கூட
புது நிறமொன்று தோன்றும்
நீ வாழும் உலகிலே
நான் வாழ்ந்தால் போதும்
நீங்காத உறவு இது
நீ மறக்க வேண்டாம்
மறுமுறை உன்னை
நான் பிரிய நேர்ந்தால்
மறு ஜென்மம் கூட
எனக்கு இங்கு வேண்டாம்!