பிழையென்பது யாதெனில்
என் குட்டித்தேவதையைப் பற்றி
நான் எழுதும் இந்தக் கவிதையில்
பிழைகளேதும் வந்திடவோ
இருந்திடவோ வாய்ப்பிருக்கிறது.
எங்களின் தொலைப்பேசி
உரையாடலின் இறுதியில்
(அ)ப்பா... (உ)ம்மா...
என அவள் தந்த முத்தத்தில்
பிழையேதும் இருப்பதாய்த்
தெரியவில்லை.