நான் வீரத் தமிழன்டா

மண் தன் கண்ணான பொன்னென
மானம் காத்த என் அப்பனின் தாத்தன்.
மறத்தமிழன் நான் என மார்தட்டி சூழ் உரைத்த என் தாத்தன் .
பறந்து போயினர் விண்ணோடு இல்லை நீங்கள்
மடிந்து கிடப்பீர் மண்ணோடு .

பார்போற்றும் என்இனம் பகடை காயாய் போய்விட
ஆட்டிப்பார்க்க நினைகின்றாய்
அடக்கி தான் வைக்கின்றாய் .

அட மூடனே ..
புலிக்கு பிறந்தது பூனையல்ல
பாய்ந்திட கற்றுக்கொடுக்க தேவையல்ல .
பதுங்கி வாழ்வது பயந்தல்ல
பலி தீர்க்கும் நாள் இன்றல்ல .

மகாபாரத போர் இதுவல்ல
சதிக்கு இங்கு வேலையில்லை
சுதந்திர தமிழன் நான் -என்னை
துகிலுரிக்க எவனும் பிறக்க வில்லை .

இனவெறி எனக்குள் துளியும் இல்லை -என் இனமழித்தால் பகைவர் தலை கொய்யும் துணிவு உண்டு .
சாதி மதமென்றால் தவறேன்பேன்
தமிழன் நீ என்றால்
அகமகிழ்வேன் ...!!!

எழுதியவர் : கயல்விழி (13-Jul-15, 3:30 am)
பார்வை : 797

மேலே