வாழாவெட்டி

வெட்டிகிட்டு வந்த பிறகு
வீராப்பு பேசாத .
வாழாவெட்டி ஆகிபுட்ட
வாய் மூட கத்துக்கோ .
வளர்ப்பு சரி இல்லையாம்
வையிது ஊரு சனம்
வாசப்படி மிதிக்காம
விலகுது நம்ம இனம் .
உன்ன பெத்த வயித்த நா
உலக்கையால இடிச்சிக்கணும்
பெண்ணை பெத்த பாவத்துக்கு
நாண்டுகிட்டு செத்திடனும் .
புலம்பி தள்ளுறா பெத்தவ
புரிஞ்சி கொள்ளாம பிள்ளைய .
புகுந்த இடத்தில் மாமியா
புடுங்கி எடுக்கிறா அனுதினம்
பொம்புள போல புருசனும்
பொய்கள் எல்லாம் நம்புறான்.
கட்டு கட்டா காசு கேட்டு கழுத்த பிடிச்சி தள்ளுறான்
வெட்டியாய் இருந்துகொண்டு என்னை
வீடு வீடாய் அனுப்பிறான் .
படிப்பு இல்லை என்பதனால்
பத்து பாத்திரம் தேய்த்திட்டேன்
பசியோடு நான் இருந்து
பணம் அனைத்தும் குடுத்திட்டேன் .
பொறுத்து பொறுத்து வாழ்ந்ததில்
பூமியையும் மிஞ்சிட்டேன்
புகுந்த வீடு தனை மறந்து
பிறந்த வீடு வந்திட்டேன்.
கண் கசக்கி வாழ தான் பெண் எனக்கு பிடிக்கல
இன்னுயிரை அழிக்கவும் நான்
இன்று
கோழையில்லை .
வாழாவெட்டி என்றாலும் வாழ வைப்பேன் பெண்மையை .
வாயாடி என்றாலும் வாழ்ந்து காட்டுவேன் உண்மையாய் ..!!