சிந்தித்து செயற்படுவீர்

நீர் இல்லா இடத்தில் கிணறும்
நிலம் இல்லா இடத்தில் வீடும்
நிச்சயம் தருவாராம்
கூச்சல் போடுறார்.
கூட்டம் கூட்டுறார்.
மின்மினி ஒளி கிடைக்காது
மின்சாரம் தருவாராம் .
பள்ளிக்கூடமே இல்லா ஊருக்கு
இலவசகல்வி கொடுப்பாராம் .
மது ஒழிப்பு அலப்பரைகள்
மணிக்கு ஒரு மது போத்தல் .
ஓட்டுக்கு ஐநூறு
லஞ்ச ஊழல் அழிப்பாராம் .
பசப்புக்காய் மரக்கன்று
பாதையோரம் நட்டுவைப்பார்
பத்திரிகை தலைப்புகளில் தன்
முகத்தை பதிய வைப்பார் .
பலன்தரும் வனங்களை பணத்திற்காய் விற்றுடுவார் .
நீதிக்கும் விலைகொடுத்து
நிஜங்களை மறைத்திடுவார் .
பதவி ஒன்று கிடைக்கும் வரை
பணிந்து குனிந்து நடந்திடுவார் .
நினைத்தது நடந்து விட்டால்
பச்சோந்தியாய் மாறிடுவார் .
குற்றவாளி யார் என்று சுத்தவாளி சொல்லுங்கள் .
தவறெங்கே நடந்ததென்று
மனதை தட்டி கேளுங்கள் .
பட்டு பட்டும் திருந்தாமல்
துட்டுக்காய் ஓட்டு விற்றால்
படுக்க பாயும் மிஞ்சாது
பார்த்து கேட்டு செயற்படுவீர் .!!!