அலைதவழும் ஆழியிலே

அலைதவழும் ஆழியிலே
குலைநடுக்கும் குளிரினிலும்
உலைகொதிக்க வேண்டுமெனில்
தொலைதூரம் படகில்போய்
வலைவீசி மீன்பிடித்து
கலையாத கனவோடு
விலைபோகு மென்றுநம்பும்
நிலைதானே நித்தமுமே …!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Aug-15, 7:14 pm)
பார்வை : 80

மேலே