துளித் துளியாய்+22-ரகு
நிலம் உதிரும் பூக்களை
அள்ளி முகர்ந்து
சிலிர்த்திருக்கலாம்,
நிழல் வேண்டி நின்ற
பற்பல சுவாசங்கள்....
ஆயிரக் கணக்கான
இலைகளின்
ஸ்பரிசங்களை விட்டுத்
தனியே நழுவி விழும்
ஒற்றைப் பூவின்
உயிர்வலி வாங்கி,
அவ்வழியே
கடந்து போகிறது
என் கவிதை மட்டும்...!!