நேர்மறை எண்ணங்கள்-ஆனந்தி
எனது
எழுதுகோலுக்கு
மை தானாக நிரம்பியது இன்று .....
எனது
நம்பிக்கை சிறகு விரித்திருக்கிறது
வானம் வரை.....
மீளாத துயரினின்று மீண்டு விடவே
எத்தனிக்கிறது இன்று - என் மனம்
கடந்து வந்த பாதை
கானல் நீர் தான்
அதை கற்கண்டாய் மாற்றிவிடும்
யுக்தியொன்று பிறந்தது எனக்குள்
அரளியோ என்றிருந்தேன் இன்றுதான்
தெளிந்தேன் அர்ச்சனை பூ நானென்று .....