நேர்மறை எண்ணங்கள்-ஆனந்தி

எனது
எழுதுகோலுக்கு
மை தானாக நிரம்பியது இன்று .....

எனது
நம்பிக்கை சிறகு விரித்திருக்கிறது
வானம் வரை.....

மீளாத துயரினின்று மீண்டு விடவே
எத்தனிக்கிறது இன்று - என் மனம்

கடந்து வந்த பாதை
கானல் நீர் தான்
அதை கற்கண்டாய் மாற்றிவிடும்
யுக்தியொன்று பிறந்தது எனக்குள்

அரளியோ என்றிருந்தேன் இன்றுதான்
தெளிந்தேன் அர்ச்சனை பூ நானென்று .....

எழுதியவர் : ஆனந்தி . ரா (14-Aug-15, 12:18 pm)
Tanglish : ennangal
பார்வை : 461

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே