கற்பனைகள்

தமிழிலே பிறந்து தமிழிலே வளர்ந்து
தமிழாலே எழுதுகின்ற
கற்பனையை ரசித்தபடி
கவிஞன் உருவாகின்றான்

நிழல் உண்டு நிஜம் உண்டு
இதில் உண்மை உண்டு பொய் உண்டு
கவி எழுத வேண்டும் கருத்தும் இருக்க வேண்டும்
பொய்யுடன் புளுகும் புனைந்திருக்க வேண்டும்

மக்கள் மனதில் பசுமரத்தாணி போல்
அர்த்தங்கள் பதிந்திடவும் புரிந்தடவும்
நெறிதவறா வாழ்க்கையினை சித்தரித்து
கருமாறா கவி படைத்து
கவிஞன் என்று பெயர் எடுக்க
கருக் கொண்டு கவி படைப்போம்

வர முனைவோம் கவிஞனாக
வரவேற்போம் கவிதைகளை
எண்ணில்லாக் கற்பனைகள் கூடி வரும்
இலக்கியங்கள் தந்துவிட்ட செல்வமெல்லாம்
எழுத்துடனே கலந்து வரும்
தேனுடன் பாலும் கலந்து விட்ட இனிமை தரும்
கவிதை எனும் சுவையாலே

எழுதியவர் : பாத்திமா மலர் (31-Aug-15, 11:20 pm)
Tanglish : karpanaigal
பார்வை : 104

மேலே