செப்டம்பர் - 5ல் - மழலை பட்டாளம் மனம் திறக்கிறது

அ, ஆ என்றதும் அனைவரும் அ, ஆ.. என்று
ஆலிவாயர்களாவோம் !
இ, ஈ என்றதும் அனனைவரும் இ, ஈ… என்று
இளிச்சவாயர்களாவோம் !
உ, ஊ என்றதும் அனைவரும் உ, ஊ… என்று
ஊளையிடுபவர்களாவோம் !
எ, ஏ என்றதும் அனைவரும் எ, ஏ…. என்று
எள்ளி நகையாடுபவர்களாவோம் !
ஐ என்றதும் அனைவரும் ஐ ஐ..ஐ.. என்று
அய்ஸ் விற்பவர்களாவோம் !
ஒ, ஓ என்றதும் அனைவரும் ஒ, ஓ….என்று
ஓலமிடுவோர்களாவோம் !
ஃ என்றதும் அனைவரும் ஃ …ஃ என்று
கூக்குரலிட்டு கப்சிப் ஆவோம் !
இப்படி எங்களின்
கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும்
நீங்கள் கற்பிக்கும் கல்விக்கு முன்னால்
எங்கள் கேலி கிண்டல்களெல்லாம்
கடலில் காணாமல்போன கடுகுகளாகும்!
எங்களை அறியாமல் செய்யும் தவறுகளை
ஆசிரியர் தினத்திலாவது திருத்தி கொள்கிறோம்1

எழுதியவர் : இரா.மணிமாறன் (4-Sep-15, 3:50 pm)
பார்வை : 71

மேலே