இளைஞனே

இளைஞனே...!
பணமுள்ளபோது மட்டுமே
உன்னிடம்
நெருங்கி வந்து நடித்துப்பேசும்
ஊனச் சமுதாயம்
உன் வாழ்க்கையில் எதிர்வந்து
வெகுவாய் பாராட்டும்..
மயங்கிவிடாதே..!
வாழ்க்கையின்
அதால பாதாளங்கள் இவர்கள்....
யாரையும் நம்பி இராமல்
முயற்சியெனும் துணை கொண்டு
வாழ்க்கைப் பயணத்தின்
தடைக்கற்களை
தகர்த்தெரியப் பழகிக்கொள்...!
பஞ்சபாண்டவர் போல்
ஐம்புலன்களும்
உனக்குத் துணையிருக்கையில்
பணமுள்ள போது வந்து
பாராட்டிப் படுகுழியில் தள்ளும்
கெளரவர் சேனை
உனக்குத் தேவையில்லை....! !