தெரியாதது
பட்டாம்பூச்சி தனது
சிறகுகளை விரித்து
படபடத்து பறக்கிறது.
குயில் மரத்தின் மீதே
குரலை இனிமையாக்கி
கூவி கொண்டிருக்கிறது.
மயில் தன்னுடைய
தோகையை படர்த்தி
நடம் புரிகிறது.
எல்லாம்....
இனிமையாய்,அழகாய், பரவசமாய்...
தோன்றுகிறது.
அவைகளுக்குதானே தெரியும்
பசியின் கடுமையும்,
தேடுதலின் துக்கங்களும்.