தெரியாதது

பட்டாம்பூச்சி தனது
சிறகுகளை விரித்து
படபடத்து பறக்கிறது.

குயில் மரத்தின் மீதே
குரலை இனிமையாக்கி
கூவி கொண்டிருக்கிறது.

மயில் தன்னுடைய
தோகையை படர்த்தி
நடம் புரிகிறது.

எல்லாம்....
இனிமையாய்,அழகாய், பரவசமாய்...
தோன்றுகிறது.

அவைகளுக்குதானே தெரியும்
பசியின் கடுமையும்,
தேடுதலின் துக்கங்களும்.

எழுதியவர் : செந்ஜென (28-Oct-15, 12:53 am)
Tanglish : theriyaathathu
பார்வை : 113

மேலே