அவள் நினைவெனும் எச்சியிலே விழும் என் அச்சமில்லா உயிர்..........................


மேகம் சூழ்ந்த
வானமும்
கொட்டி தீர்த்த
மழையும்
சகதியிலே மிதக்கும்
பூமியும்
சொல்ல தயங்கும்
என் காதலை

அவள் பெண்ணென்று
பிறந்தவள்
வந்தென்னை
தின்றவள்
காதலால் என்னை
கொன்றவள்

நித்தம் பலமுறை
என் கனவில்
யுத்தம் செய்தவள்
இப்போது சத்தமில்லாமல்
கலைந்து போனாள்

அவள் வரும் காலங்கள்
இனி இல்லை
அவள் நினைவுகள்
ஒன்றே இனி
என் தொல்லை

மறையாத
முகமது அவள் முகம்
கலையாத
நினைவது அவள் நினைவுகள்

என் முதுகெலும்பிலே
ஊரும் காதல்
என் உச்சியிலே
கூடும் ஞானம்
அவள் நினைவெனும்
எச்சியிலே விழும்
என் அச்சமில்லா உயிர்............

நந்தி.......

எழுதியவர் : நந்தி (6-Jun-11, 1:35 pm)
பார்வை : 353

மேலே