அன்பின் சுவடுகள்
இன்னாரு மகனா
என்று ஆரம்பித்து
காலகாலத்துக்கும்
பொழச்சுக்கெடக்கனும்டா
என்று நமக்காக
காவல் தெய்வங்களை
வேண்டிக்கொள்ளும்
இந்த
ஊர்பெருசுகள்
உயிரோடிருக்கவேண்டும்
அடுத்தமுறை
நான் ஊருக்குவரும்போதும்.
நிலாகண்ணன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
