சிலையாய் ஆவதற்கு

சிலையாய் ஆவதற்கு !

வா….. வா… என்றே
வெறுங்கற்கள்
அழைப்பதில்லை
சிலையாய் ஆவதற்கு !

சிறப்பாய் தெரியும்
கற்கள்தான்
சிலையாய் மாறிடும்!

வீணாய் வெறுங்கல்லாய்
வீழ்ந்து கிடப்பாயோ ?
சிலை வடிவாய்
சிறப்பாய் இருப்பாயோ ?

சிலையாய் ஆனால்
சிறப்புதான் தோழா !
கலையாய் ஆனால்
கவிதைதான் தோழா !

சிலையானாலும்…
கவிதையானாலும்
நன்றுதான் தோழா !


------ கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Jan-16, 8:36 pm)
பார்வை : 207

மேலே