அனிச்சமே

இதுவரை நான் கிறுக்கிய
யாவும் கவிதை என்றால்
பெண்ணே நீ என்னென்று சொல்வேன்...

ஒரு விறகு போதும்
உனை (உனக்கு இசை )மீட்டிட...

ஒரு நட்பு (பார்வை) போதும்
இந்த யுகங்கள் கரைந்திட...

யெளவனம் எத்தனிக்கும்
நீ பிறந்த நாளில்
மலருக்கு(உனக்கு )வாழ்த்து சொல்ல...


காதல் கொண்ட நெஞ்சம்...
ஸ்பரிசம் தேடும் தஞ்சம்...
அன்பு கொண்ட அன்னை...
பாசம் மிக்க இருமலர்கள்...
உயிர் வென்ற நட்பு...
கண்ணை ஈர்க்கும் இயற்கை...
காதை வருடும் இசை ...
காலங்களை கடந்து
கண்ணே உன்னோடு
பயணிப்போம்.....
கணம் தோறும் மனம் நினைப்பது நிறைவேறும் ...

எங்கள் அனிச்சத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Jan-16, 12:24 pm)
பார்வை : 1068

மேலே