வெண்ணிற அழகி

சாளரம் வழியே வீசிய தென்றல் என்னை அழைக்க
சற்றே நகர்ந்தேன் நிலவொளி பார்த்தேன்...

வெண்மேகங்கள் வெள்ளைப்பசுக்கள் போல் நகர
என் நிலவு மட்டும் அசையாது அமர்ந்து என்னைப்பார்த்தாள்...

இறைவனை வேண்டினேன் இந்த இரவு முடியாதிருக்க
இத்தனை நாளும் எத்தனை இரவுகளை கடந்திருப்பேன்...

உன்னை தொடத்துடிக்கும் என்னை என்ன செய்து அமைதிப்படுத்த
என் எண்ணத்தில் உதிக்கும் ஆசைகளை கவிகளாய் படைத்து ரசிப்பதை தவிர..

எழுதியவர் : பர்ஷான் (24-Jan-16, 2:43 pm)
Tanglish : vennira azhagi
பார்வை : 127

மேலே