காதலின் வலி ---- வஞ்சித் தாழிசை

மயங்கிடும் மாலையிலே !
தயங்கியும் சோலையிலே !
வியந்திடும் வேளையிலே!
துயரமும் ஏனடியோ ?


எழில்மிகும் தேவதையே !
மொழியியல் கண்மணியே !
பொழிலிடைப் பைங்கிளியே !
அழிப்பதும் ஏனடியோ ?


சிலைகளும் பேசிடுமோ ?
விலைதனைக் கேட்டிடுமோ ?
மலைகளும் நின்றிடுமோ ?
நிலைகளும் ஏனடியோ ?

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Feb-16, 11:53 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 82

மேலே