பண்புள்ள பேரா வாழ்க

அடுப்பெரிக்க விறகு வெட்டி
எடுத்தவளும் திரும்பும் போது
இடுப்புவலி வந்துக் கொல்ல
நடுவழியில் அமர்ந்தாள் பாட்டி !

விளைந்தநிலம் காய்ந்த தைப்போல்
திளைத்தவுளம் சோர்ந்து போச்சு
சளைக்குமட்டும் வேலை செய்து
களைத்தமனம் வாடிப் போச்சு !

தேடிவந்த பேரன் கண்டு
ஓடிவந்து கட்டிக் கொள்ள
நாடிநரம்பும் சிலிர்த்துப் போக
கோடியின்பம் கண்ணில் பூத்தாள் !

மண்ணிலீரம் வற்றி னாலும்
கண்ணேயுன் ஈர நெஞ்சால்
புண்பட்ட இதயம் வென்றாய்
பண்புள்ள பேரா வாழ்க !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Feb-16, 6:19 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 71

மேலே