ஒவ்வொரு நொடியும் இறப்பு

தன் மீது நம்பிக்கை
இருப்பவர்கள்
துணிந்து வாழ்க்கையில்
மரணத்தையும் துரும்பாக
மதித்து முன்னேறிடுவர்
தன் மதிப்பற்றவர்கள்
துணிந்து நம்பிக்கையை
பிறர் மீது வைப்பர்
எப்படியேனும் பிறர் தயவில்
படியேறிடலாம் என்று
சுத்த வீரனுக்கு
மரணம் கூட துரும்பு
கோழைகளோ வாழும்
ஒவ்வொரு நொடியும்
இறந்து பிறக்கின்றனர்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Feb-16, 9:46 pm)
பார்வை : 182

மேலே