மெளனம் வேண்டாம். . .

உன்னை நேசித்து
உனக்காக காத்திருக்கும்
என் இதயத்தை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னை நினைத்து
என்னுள்ளத்தில் கனவு காணும்
என் மனதை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன் பெயரை உச்சரித்து
உனக்கு பல கவிதை எழுதி
உணர்வற்ற என் கைகளை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னோடு வாழ்ந்து
உனக்காக சாக துணியும்
என் உயிரை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

பெண்ணே , மரணம் கூட ஒரு தடவை தான்
ஆனால் உன் மெளனம் நித்தம் நித்தம்
என்னை கொல்லாமல் கொல்கின்றதே
இனியும் மெளனம் வேண்டாம். . . .
அன்பே உன் திருவாய் மலர்ந்து
என்னோடு ஒரு வார்த்தை பேசு

எழுதியவர் : சேது (15-Jun-11, 7:01 pm)
சேர்த்தது : Sethu
பார்வை : 598

மேலே