ஏன்?ஏன் ? ஏன் ?

நிலவே நீ காய்வது ஏனோ ?
நிம்மதி அற்றோர் வாழ்வில்
நிம்மதி வூட்டவா .

தென்றலே நீ தவழ்வது ஏனோ?
தேன் மலர் மணத்தை
தெருவில் பரப்பவா !

மலரே நீ மலர்வது ஏனோ ?
மங்கையர்வாழ்வை
உவமை காட்டவா .

ஞாயிறே நீ சுடுவது ஏனோ
நீதி அற்ற ஞாலம்
அழிகவே என்றா .

இரவே நீ இருள்வது ஏனோ
இருட்டில் தீமையை
விரைந்து வளர்க்கவா.

மழையே நீ பொழிவது ஏனோ
நல்லோர் பல பேர்
உண்டென்று எண்ணியா .

புயலே நீ பொங்குவது ஏனோ
பொறுமை காத்தது
போதுமென்று எண்ணியா .

மரமே நீ அசைவது ஏனோ
மனிதனை போல நான்
மடையன் இல்லை என்றா.

அலையே நீ அலைவது ஏனோ
வாழ்க்கையின் உவமை
நீ என்று காட்டவா .

எழுதியவர் : (15-Jun-11, 8:38 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 270

மேலே