பாவி என்னை மென்று தின்ற பாதகரே

அம்மையும் அப்பனும்
காமத்தில் தமை மறந்து
இழைத்திட்ட பாவத்தின் தண்டணையோ என் வாழ்க்கை....
யாரிடத்தில் நான் உரைக்க
யாரிடத்தில் நீதி கேட்க
ஆதரவு தேடி நானும்
போன இடம் எங்கிலுமே
பாசக்கரம் நீட்டினார்கள்
பாவி என்னை மென்று தின்ன...
பாவக்கரம் நேசக்கரம் என்றல்லோ நான் எண்ண
பாவச்செயல் பாவி செய்ய
தூண்டுகின்ற கொடுஞ்செயலை எங்கனம்
நான் உரைக்க..
காமத்தால் கட்டுண்ட காமுகரின்
வேட்டைக்கு பாவி நானும்
பலியாடு ஆனதென்ன..
வந்தவனும் வருபவனும்
என்னுடலை மென்று தின்று
ஏப்பமிட
வலி பொறுக்க முடியாமல்
பாவி நானும் வருந்தியள
ஈவிரக்கம் ஏதுமின்றி வேட்டையாடும் காமுகர்கள் கைகளிலே பாவி இவள்....
தசை தின்னும் கழுகுகளின்
நகம்பட்ட இடமெல்லாம் கீரல்கள்
அதன் பின்னே வழிந்தோடும்
ரத்தங்கள்.....
வலி பொறுக்க முடியலயே....!!
பாவி உயிர் போகலயே....!!
இத்தனையும் நான் சுமக்க வேண்டுமென்றோ என் விதி....??
இது தானோ என் தலைவிதி...????

எழுதியவர் : (4-Mar-16, 10:03 pm)
பார்வை : 64

மேலே