இனிமை
துன்பங்களை சந்திக்கலாம்
இன்பத்தின் சாரல் இருந்தால்
காயங்களை ஆற்றலாம்
கனிவான வாய்மொழியினால்
சோகங்களை விரட்டலாம்
சுமை குறைக்கும் நட்பிருந்தால்
கண்ணீரும் இனிக்கலாம்
தடை போடும் கரங்களால்
பாலையான மனதிலும் பசுமை தோன்றலாம்
மழையென வாழ்க்கைத்துணை இருந்தால்.