விடைதெரியா

அழகே...

உன்னை நினைக்கும் தருணம்
உலகையே மறந்தேனடி
என்னை தாலாட்டும் கீதங்கள்
உன் பொன் சிரிப்பாகுமடி
உன்னை கட்டி தழுவும் தருணம்
என் கைகளும் நடுங்குதடி
பயம் வேண்டி அல்ல, இந்த பாதுகாப்பை
எப்போதும் தர வேண்டி ...

காதலின் சிறப்பே ஊடல் தான் - அந்த
ஊடலே உன்னை ஊமையாக்கியதோ???

என்னை விட்டு நீ பிரிந்தபோதும்
எனக்கு ஏதும் வலிக்கவில்லை
உன் நினைவுகளை சுமந்திடவே
என் இதயமும் மரத்துபோனதடி
மரத்துப்போன இதயம்தனில்
வலிவந்திட உரைத்திடுமோ

நினைவை மட்டும் விட்டுவிட்டு
நீ நகர்ந்த அந்த நொடி
நிலை புரியா நிலையில் நான்
நிலைகுலைந்து நின்றேனடி...

உன்னை அடையும் வழி தேடி
மனமதுவும் குமுருதடி..
வழி மட்டும் பிறந்து விட்டால்
வந்திடுவேன் உனை சேர
சேரும் நேரம் கூடும் வரை
காத்திருக்க முடிவுசெய்தேன்..

அது

காலம் கனியும் வரையா ? ?
என் கடைசி மூச்சு வரையா? ? ?

விடைதெரியாமல் நான்

எழுதியவர் : வினு (6-Apr-16, 7:55 am)
சேர்த்தது : சதீஷ் குரு நாதன்
பார்வை : 77

மேலே