வீட்டிலே இருந்து கோட்டை வரைக்கும்

அண்ணே 200க்கு மேற்பட்ட தொகுதிங்களிலெ நம்ம கட்சிதான் ஜெயிக்கும்னு கருத்துக் கணிபெல்லாம் சொல்லுது. நம்ம இமாலயா வெற்றி உறுதியாகிருச்சு. நீங்க முதல்வரா பதவி ஏற்கப் போற அன்னைக்கு இந்தியாவே தமிழகத் தலைநகரைத் திரும்பி பாக்கற மாதிரி ஏதாவது செய்யணும் அண்ணே.

நீ சொல்லறதும் சரிதாண்டா தம்பி. தமிழக அரசியல் பண்பாட்டின்படி என்னோட வீட்டிலிருந்து கோட்டை வரைக்கும் வழி நெடுக பேனர் கட்அவுட்டு எல்லாம் வச்சிருங்க. அடுத்து வழி நெடுக இதுவரைக்கும் யாரும் செய்யாத அளவுக்கு பட்டாசு வெடிச்சு அசத்தணும். அதோட நம்ம கட்சிக்காரங்க எல்லாம் பாதையின் இருபுறமும் நின்னு என்ன வாழ்த்திப் பாடல் பாடவும் ஏற்பாடு பண்ணிடுங்க.

அண்ணே எதிர்கட்சிக்காரங்க தோத்துப் போன எமாற்றத்திலே நம்மளப் பத்தி மோசமான அறிக்கை எல்லாம் வெளியிடுவாங்களே?.

அதப் பத்தி நாம எதுக்குடா கவலைப்படணும்? அவதூறு வழக்குப் போட்டாப் போச்சு. நாம 200க்கு மேற்பட்ட தொகுதிங்களிலெ ஜெயிக்கறது உறுதி. நம்மள அஞ்சு வருசத்துக்கு யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. நாம சொல்லறது தான் சட்டம்ங்கறத நாம எப்பவுமே மறக்கக் கூடாதடா தம்பி.

நீங்க சொல்லறதும் சரிதான் அண்ணே.

@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (4-May-16, 2:40 pm)
பார்வை : 107

மேலே