பூத உடலின் சாம்பல்
புகழுடலை புழுக்கள் அரித்துச் சென்றதும்
இகழ்ந்த மாந்தர்கள் இத்தரணியில் இவனிருக்கையில்
அழுதும் விழுந்தும் தொழுவார் இவன்முன்
விழுதாய் இவனது வேர்துளிர் விட்டதும்.
கலிவிருத்தம்

