இலக்கியன் S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலக்கியன் S
இடம்:  PATHUTHAKKU
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2015
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  12

என் படைப்புகள்
இலக்கியன் S செய்திகள்
இலக்கியன் S - எண்ணம் (public)
31-May-2016 7:15 am

வானம்
அந்திப் பொழுதினில்
உன்னை வரைந்து
கொண்டிருக்கிறது

இளநரை கூந்தல்
மின்னலாய் வெட்டுகிறது
உன்னிரு கண்களாய்

காற்றில் மேகங்கள்
களைந்து கிடக்கின்றது
கார்முகில்கள் நீர்முகிலை
தெளிக்கின்றன
சிலிர்ப்பில் சுடுதீக்கிரையான
சிட்டுக்குருவி படபடக்கிறது

சாரலில் நீ தெரிக்கிறாய்
மொட்டுகள் அவிழ்ந்து
முழு பௌர்னமியாய்
உலவுகின்றது

தென்றலில் கிளைகளாய்
என்னை அசைத்து
உன் மௌனம் மட்டும்
பூத்து உதிர்கின்றது.


-இலக்கியன் அகல்யன்.

மேலும்

இலக்கியன் S - எண்ணம் (public)
31-May-2016 7:12 am

நீதான் இந்த உலகத்தின்
ஒவ்வொரு அனுவின்
மாபெரும் ரசிகன்
பாக்கியசாலி நாங்கள்
உன்னை பெற்றதால்
நீ பராக்கிரமசாலி

கருப்பு வெள்ளை கட்டையின்
மீது உதிர்ந்த பூவெல்லாம்
காதலியின் தலையில்
மலர்கிறது

கனவு தேசத்தின் கை
குழந்தைகளாவோம்
நீ தாலாட்டும் போது
உன் தோள்மீது நாங்கள்
நீ இன்றி உறங்காது ஓர் இரவும்

ஓடியும் தேயவில்லை
உன் இசையில் சக்கரம்
மகிழும் உந்து உன்னாலே
நகர்கின்றன நடுஇரவில்

மௌனத்தின் வலியில்
நடுவயதுக்காரியின்
மருத்துவன் நீ
என்ன மகத்துவம் 
செய்தாளோ உனதன்னை

மெட்டியொலி காதோரம்
மிளிர்கின்றது உன்குரலில்
செவிக்கு சுவை நரம்புகளை
நீ துளிர்க்க செய்தவன்
வீனைகள் அரும்பாய்
விருந்து வைக்கயில்

பட்டத்தையும் வென்று
பட்டறிவையும் வென்று
இருக்கிறாய்
களைப்பு உன்னிசை சாரலில்
களை பூவாய் உதிரும்

மணக்கோலத்தில் சிறகுகள்
மேலெழுகின்ற
கனவு கவிதைகள் நீ சுண்டும்
விரலசைவுதான்

வானிலிருந்து பறவைகள்
சிறகை ஒவ்வொன்றாக
உதிர்த்து கொண்டுருக்கின்றன
உன் இசை குறிப்பை ஏந்திய
வண்ணம்


-இலக்கியன் அகல்யன்.

மேலும்

இலக்கியன் S - எண்ணம் (public)
31-May-2016 7:08 am

உன் பார்வையில் 
நீல வானம் நீண்டு பரந்து
கிடக்கின்றன

பால்வெளியில்
நீ மட்டும்தான்
நின்று கொண்டிருக்கிறாய்

மலையருவி சிதறலில்
உடைந்திடாது மேகங்கள்
மூடி வைக்கின்றன
ஒளிமஞ்சள் நிலவை

திரையை விலக்கியதும்
சிறகுகள் அசைகின்றது
செம்பருத்தி பூவொன்று
நனைந்து மிதக்கிறது

நீ நிலவை பார்த்துக்
கொண்டிருக்கிறாய்
உன்னை நிலாவென
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


-இலக்கியன் அகல்யன்.

மேலும்

இலக்கியன் S - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2016 2:03 pm

வீதிகளில் விளக்கேற்றி
வைத்துக் கொண்டே
நடக்கிறார்களாம்

நிழலில் அவர்களது
நிர்வாணம் கூட எனக்கு
தெரியவில்லை

நாய்களும் நரிகளும்
வாழ்க்கைப் பெற்று-நடுத்
தெருவில் குரைத்துக்
கொண்டிருக்கிறது

நாங்கள்
எச்சில் தின்றா பழகினோம்?

மிச்சம் தருகிறோம்
பிழைத்துக் கொள்ளுங்கள்..


-இலக்கியன் அகல்யன்

மேலும்

உழவனின் கண்ணீர் சிந்தும் கண்களுக்கு எப்போது தான் நாம் விடியல்கள் கொடுப்போம் 05-May-2016 5:29 pm
இலக்கியன் S - இலக்கியன் S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2016 3:27 pm

விரித்து வைத்த மணற்
படுக்கைகள் அழகாய்
உழவுக்கு நெளிந்து கொடுக்கிறது

வலியை கூட அவன்
வறுமைக்காக பொறுத்து

ஏளனம் எதற்கோ?? வான் கூட
கை கொட்டி சிரிக்க மறுக்கிறது

சோற்றுக்கு முலைபாலும்
கறக்க வலிக்கிறது

தேசத்தில் வீசும் காற்றும்
அவன் வியர்வையில்
வடியும் இரத்தத்தை என்றும்
துடைக்க போவதில்லை

உச்சிவெயில் நிழழுக்கு
மண்ணில் முளைத்த
கூரை கருவறையில்
ஒரு நிமிடம் பதுங்கி
தத்துப் பிள்ளையாகி விடுகிறான்

உணவை வளர்த்து
தாயாகிவிட்ட அவன்

வீடுகள் வழியிழந்து
வீதி வரையில் நகர்கிறது
பட்ட கடன்கள் எல்லாம்
வாசலில் கரைந்து அழுகையில்

சூறையாடப்பட்ட உடைமையை
விதையாக இழந்து
மணலில் இருந்த

மேலும்

நன்றி 27-Apr-2016 11:30 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:07 pm
ஆயிரம் காயங்கள் இருந்தாலும் சிறிதளவு அறுவடை கண்டும் மனம் தேற்றும் நல்ல உள்ளம் அவன் ஆனால் அவன் வறுமை மட்டும் மண்ணில் தொடர் கவிதைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:07 pm
இலக்கியன் S - இலக்கியன் S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2016 3:27 pm

விரித்து வைத்த மணற்
படுக்கைகள் அழகாய்
உழவுக்கு நெளிந்து கொடுக்கிறது

வலியை கூட அவன்
வறுமைக்காக பொறுத்து

ஏளனம் எதற்கோ?? வான் கூட
கை கொட்டி சிரிக்க மறுக்கிறது

சோற்றுக்கு முலைபாலும்
கறக்க வலிக்கிறது

தேசத்தில் வீசும் காற்றும்
அவன் வியர்வையில்
வடியும் இரத்தத்தை என்றும்
துடைக்க போவதில்லை

உச்சிவெயில் நிழழுக்கு
மண்ணில் முளைத்த
கூரை கருவறையில்
ஒரு நிமிடம் பதுங்கி
தத்துப் பிள்ளையாகி விடுகிறான்

உணவை வளர்த்து
தாயாகிவிட்ட அவன்

வீடுகள் வழியிழந்து
வீதி வரையில் நகர்கிறது
பட்ட கடன்கள் எல்லாம்
வாசலில் கரைந்து அழுகையில்

சூறையாடப்பட்ட உடைமையை
விதையாக இழந்து
மணலில் இருந்த

மேலும்

நன்றி 27-Apr-2016 11:30 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:07 pm
ஆயிரம் காயங்கள் இருந்தாலும் சிறிதளவு அறுவடை கண்டும் மனம் தேற்றும் நல்ல உள்ளம் அவன் ஆனால் அவன் வறுமை மட்டும் மண்ணில் தொடர் கவிதைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:07 pm
இலக்கியன் S - இலக்கியன் S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2016 6:24 pm

மரண படுக்கையில்

புல்லுக்கட்ட தூக்கிக்கிட்டு
புள்ளைகள அள்ளிகிட்டு
சல்லிக்கட்ட பூட்டிக்கிட்டு
சந்தைவழி போகயில
கரிசகாட்டு ஓரத்துல
கள்ளிச் செடி குத்திடுச்சே
விரிசல் விட்ட வயல்காடு
வாய்காஞ்ச வரப்பினிலே
வெள்ளம் வந்து பாய்கயிலே
காக்கை வந்து கத்துதிங்கே
கரையான் வந்து ஊறுதிங்கே
பொட்டல் காட்டு புழுதியில
புல்லு பூச்சி மொளைக்கயில
கரட்டுக்காட்டு மனுசன் மக்கா
கோமனத்த கட்டிகிட்ட கோவன்
மகன் நடக்குறானே வயல்ல
நாத்த பாவி அறுக்குறானே
நாய்க்கும் சோத்த ஊத்துறானே,
சொரனை கெட்ட சாதி சனம்
சொல்லாமலே போகு திங்கே
எள்ளாமலே வாழுதிங்கே

மேலும்

வட்டார வழக்கு கவிதைகள் யாரையும் விரைவில் ஈர்த்துவிடும். இதுவும் அதே தனித்துவத்தை மனதுக்குள் நெருடலை விதைத்து நிறைகிறது. 29-Apr-2016 10:43 pm
நன்றி நண்பா.....!! 26-Apr-2016 7:56 pm
வட்டார வழக்கில் நிதர்சனமான வாழ்வியல் பாடம் இக்கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 1:16 am
இலக்கியன் S - இலக்கியன் S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2016 1:59 pm

பூவோடு சேர்ந்த வாசம்
புல்லாங்குழலோடு உரசி வீசும்

நாரோடு பூவெடுத்து
நறுமலரை நீ தொடுத்தால்

நகங்கள் பட்டதெல்லாம் கூசும்

தென்றலோடு தெவிட்டிய சுகராகம்
மௌன மொழிகளாய்
என்னிடத்தில் பேசும்

நிலவொளியை இரவல் வாங்கி
நெற்றி பொட்டாய் சுமக்க வேண்டும்

நெஞ்சோரமாய் சாய்ந்து தினம்
நீலவானய் இரசிக்க வேண்டும்

கண்ணோரம் பார்க்கையிலே கவி
மொழிகளில் பேசிட வேண்டும்

சிறகடிக்கும் கொழுசொலிகள்
சில்லென்று காதோரம்
சிரிப்பூக்களில்
மொய்க்க வேண்டும்

சிலிர்த்தெழுந்த மயிர் நுனிகள்
சிறிதேனும் உறங்க வேண்டும்

செவ்வானம் கருக்களிலே
செம்பருத்தி பூ இதழில்
மல்லிகை பூ மலர்தல் வேண்டும்.

மேலும்

அழகான இயற்கையின் வருடல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 10:41 pm
இலக்கியன் S - இலக்கியன் S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2016 7:16 pm

பெண்தாயே பிறந்தாயே
வாழும் பிணத்தை தாங்கி
வளர்த் ததாயே

மண்தின்றே இரையாவோம்
வாழுங் காலத்தை தாங்கும்
சுமை ஆவோம்

தும்பிபோல் திரிந்தவளை
மா வாய்வெம்பி போய்
கண்டேனடி மலடி

என்றபழிச் சொல்லாலே
விம்மல் வடித்து நூலானாள்
பற்றிஎரியுந் தீயானாள்

போதைசுகம் என்மேனியென
பூ வினமாய் வண்டாட குறை
என்றும் கண்டதில்லை

பிறப்புறுப்பால் ஆணென்போம்
பிறர் பொறுப்பால் பெண்னென்போம்
தனிமலடி இனமுண்டோ?

உளமலடாய் போனோர்கள்
விழி மலடை குருடனென்பார்
முடவனவனை ஊனனென்பார்

உறு தீயாய் சொல்கையிலே
ஒருத்திகூட மலடில்லை
உளமலடே ஏராளம்

தாராளமாய் மனமிருந்தால்
உலகம் பெற்ற பேறுகூட
தன்கிளை தானே

கல்லறையில் பூ

மேலும்

உருக்கமான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 1:25 am
இலக்கியன் S - இலக்கியன் S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2016 6:24 pm

மரண படுக்கையில்

புல்லுக்கட்ட தூக்கிக்கிட்டு
புள்ளைகள அள்ளிகிட்டு
சல்லிக்கட்ட பூட்டிக்கிட்டு
சந்தைவழி போகயில
கரிசகாட்டு ஓரத்துல
கள்ளிச் செடி குத்திடுச்சே
விரிசல் விட்ட வயல்காடு
வாய்காஞ்ச வரப்பினிலே
வெள்ளம் வந்து பாய்கயிலே
காக்கை வந்து கத்துதிங்கே
கரையான் வந்து ஊறுதிங்கே
பொட்டல் காட்டு புழுதியில
புல்லு பூச்சி மொளைக்கயில
கரட்டுக்காட்டு மனுசன் மக்கா
கோமனத்த கட்டிகிட்ட கோவன்
மகன் நடக்குறானே வயல்ல
நாத்த பாவி அறுக்குறானே
நாய்க்கும் சோத்த ஊத்துறானே,
சொரனை கெட்ட சாதி சனம்
சொல்லாமலே போகு திங்கே
எள்ளாமலே வாழுதிங்கே

மேலும்

வட்டார வழக்கு கவிதைகள் யாரையும் விரைவில் ஈர்த்துவிடும். இதுவும் அதே தனித்துவத்தை மனதுக்குள் நெருடலை விதைத்து நிறைகிறது. 29-Apr-2016 10:43 pm
நன்றி நண்பா.....!! 26-Apr-2016 7:56 pm
வட்டார வழக்கில் நிதர்சனமான வாழ்வியல் பாடம் இக்கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 1:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே