10 செகண்ட் கதைகள் - இன்று நீ புதிதாக

குடிகார குப்புசாமியை மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக்கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.
" உன்னுடைய பாவங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.இன்று நீ புதிதாக சுத்தமானவனாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ சாமுவேல் என்றழைக்கப்படுவாய்.
இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு சாமுவேலே ".

சத்யம். டீ குடிக்கலாமா பாஸ்ட்டர்.
தாராளமா எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்.
ஓகே பாஸ்ட்டர்.

சாமுவேலான குடிகார குப்புசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் ரம் எடுத்து தொட்டி நிறைய இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.

" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ " டீ " என்றழைக்கப்படுவாய் "

எழுதியவர் : செல்வமணி (6-May-16, 11:54 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 193

மேலே