வாழ்வும் சாவும்
மனிதன் இறக்கிறான்
உயிர் பிரிகிறது
உடல் கிடக்கறது.
துக்க வேளையில்
நல்லது பேசப்பட்டு
கெடுதல் விடப்படுகிறது.
நாட்கள் செல்ல
மாறுகிறது
பேச்சுக்கள்.
நரம்பில்லா நாக்கு
கூடவும் பேசுகிறது
குறையவும் பேசுகிறது.
வாழ்வின் அழகை
புகழ்ச்சி மெருகுட்டுகிறது
இகழ்ச்சி விகாரப்படுத்துகிறது.