ஆதியே அந்தியிலும் உடன் இருந்துவிடு

மண்ணாலே கட்டிவச்ச
கோட்ட
மாளிக
எல்லாம் உனக்காக

மணற் கோட்டையானாலும்
மன
கோட்டையானாலும்
நீ தான் என் ராசா



நந்தவன பூவெல்லாம்
உன் பேர சொல்லி தான் வாசம் வீசும்
இந்த பூவும் உன்னாலே தான் சுவாசம் பெறும்

மன்னா
மங்கை இவள்
உன் அந்திமந்தாரை
அந்தபுரத்திலும்
அந்திபொழுதிலும்
ஆதியே
இந்த பாதியை
சுமந்துகொள்ளடா (ஏற்றுக்கொள்ளடா)


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-May-16, 8:32 am)
பார்வை : 90

மேலே