ஆதாரமாய் நீ இருப்பதால்
இயற்கை படைத்த பஞ்ச பூதங்களில்
நீயும் அதனுள் ஒன்றென
வழிபடும் மானுடத்தை
வாழவைப்பது போல்—நீ
காட்சி தந்தாலும்
நீருக்கும், நெருப்புக்கும்
தீரா பகையிருந்தும்,
வீசும் காற்றே உன் தீண்டலுக்கு
வரம் வேண்டி இரண்டுமே
ஏக்கமுடன் காத்திருக்கும்
என்றும் உன்னோடுதான்
இரண்டுமே உறவாடும்
யாரோடு நீ சேர்ந்தாலும்
வேரோடு அழித்து நாசமாக்கும்
விவேகம் உனக்குண்டு
இருந்தும் மண்ணின் உயிர்கள்
உன்னை வெறுப்பதில்லை
அவைகளின் உயிருக்கு
ஆதாரமாய் எப்போதும்
நீ இருப்பதால்.