மதம்
மதம்
======================================ருத்ரா
அறியும் முன் என் தலை மேல் அது.
அறிந்த பின் அது என்
காலின் கீழ் உலகம்.
வேதப்புத்தகம் நிரம்பி வழிந்தது
வார்த்தைகளால்
கடவுளால் அல்ல.
மண்டியிட்டேன்
மண்ணில் விண் தெரிந்தது
இரண்டிலும் மனிதன் இருந்தான்.