தலைவிதி
வாதாடிப் பெறமுடியாததைப்
போராடிப் பெறமுனைந்த
தமிழ் மக்களினத்தை
சேர்ந்தவள் நான்...!
எம் வாழ்விற்கு
தீர்வுகள் இல்லை
அதிர்வுகள் எம்மை
தொடர்கின்றன...!
சுகங்கள் எல்லாம் எங்கள்
சோகங்களாக மாறி விட்டன...!
கனவுகள் எல்லாம் எங்கோ
காணாமல் போய்விட்டன...!
முகமிழந்த மனிதர்களாக...
முகவரியைத்
தொலைத்தவர்களாக...
இருந்தும் இன்னும் வாழ வேண்டும் என்ற
தலைவிதி. ..தவிப்பு