தெய்வம் இருப்பது…

ஆடும் கோழியும் பலிகேட்டே
ஆண்டவன் என்றும் வருவதில்லை,
தேடும் இறைவன் வெளியிலில்லை
தேடிப் பாராய் உன்னிடமே,
கூடும் கூட்டமும் துணையில்லை
கூறும் வார்த்தையும் உண்மையில்லை,
வாடும் மாந்தர்க் குதவிடுவாய்
வந்து சேரும் பரம்பொருளே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Aug-16, 6:47 pm)
பார்வை : 79

மேலே