எழுதுகோலைஉயர்த்தியவன்

எழுதுகோலைஉயர்த்தியவன்

முத்துமுத்தான
வரிகளைஈந்த
முத்துக் குமரா - உன்
வெண்முத்துக்கள் உதிர்த்த
நன்முத்துக்களை பெருந்துயரில்
ஆழ்த்தியதுஏனோ?

தந்தையின் தகவுகளை
தரணிக்கு சொன்னவனே!

தங்கத் தழிழை
தரமாகத் தந்தவனே!

'பேசுகிறேன் பேசுகிறேன் உன்
இதயம் பேசுகிறேன்" என
தன்னம்பிக்கை ஊட்டியவனே!

'கண்பேசும் வார்த்தைகளை"
'சுட்;டும் விழிச் சுடரை" என
விளித்தவனே!

'அணிலாடும் முன்றில்" லில் - என்னை
அலைபாய வைத்தவனே!!

உன்னுள் என்னையே
'வேடிக்கைப் பார்க்க” வைத்தவனே!

அப்பாக்களின் தாலாட்டாம்
'ஆனந்தயாழை" மீட்டியவனே!

காதலர்களின் சொப்பனமான
'தேவதையைக் கண்டவனே"!

குரலொலியைஉயர்த்தாது
எழுதுகோலைஉயர்த்தியவனே!

உன் எழுத்துக்களோ
திரையுலகின் எழிலேறு - அவை
என்றும் பெற்றிடும் நிலைபேறு– உன்
காலத்தில் வாழ்ந்தேன் என்பதே–என்வாழ்
காலத்தின் பெரும்பேறு!

எழுதியவர் : கோ.குப்பன் (29-Aug-16, 3:26 pm)
பார்வை : 65

மேலே