அப்பா

வாழ்க்கை முழுதும்
எனக்காய் வாழும்
உன் அன்பை பற்றி
கவி எழுத எனக்கு தோன்றவில்லையே!

தாய் அவள்
ஒரவிழிப்பார்வையிலே
எனை அறிமுகம்
செய்ய
எல்லையில்லா பேரானந்தம்
கொண்டாய் .....

அப்பா என்று
நான் அழைத்த முதல்
தருணத்தில்
அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தாய் ....

நான் எதை கேட்டாலும்
இல்லை என்று
சொல்லாமல்
செய்யும் குணம்
கடவுளையே மிஞ்சி
விட்டாய் அப்பா ....

பெண் பிள்ளையாய்
பிறந்ததற்கு
மகிழ்ச்சி
கொள்கிறேன்
எந்நாளும் நீ வெறுத்ததில்லை
அப்பா ....

மற்றுமொரு பிறவி
ஒன்றிருந்தால்
உன்னை கருவில்
சுமக்கும் வரமொன்று
வேண்டும் அப்பா ..

எழுதியவர் : கிரிஜா.தி (8-Sep-16, 10:32 am)
Tanglish : appa
பார்வை : 838

மேலே