தோழிமார்களே தோழன்மார்களே

மாலை வாடுமுன்னே
மனம் வாடிப்போனால்
இல்லறம் எப்படி
மலர்ச் சோலையாகும் ?
யோசியுங்கள்
தோழிமார்களே தோழன்மார்களே !
ஜோலியும் பிரிகிறாள்
பிராட் பிரிட்டிடமிருந்து
சோலி வேறில்லையோ இவர்களுக்கு
மனமுறிவு இல்லையென்றானால்
மணமுறிவு உண்டோ உலகில்
யோசியுங்கள்
தோழிமார்களே தோழன்மார்களே !
~~~கல்பனா பாரதி~~~