வடிக்கிறேன் கற்பனையில் வரிகளை

புன்னகை மொட்டுகளை ​​உதிர்க்கிறாய்
பூக்களாய் மலர்கிறேன் என்னுள் ....​
சூட்டுகிறேன் மலர்களை உன்கூந்தலில்
பூட்டுகிறேன் உள்ளத்தில் உனைவைத்து ...

வடிக்கிறேன் கற்பனையில் வரிகளை
முடிக்கிறேன் கவிதையை நெஞ்சினில் ...
படிக்கிறேன் செவிமடுக கொடியிடையே
துடிக்கிறேன் துயில்கொள்ள உன்மடியிலே ...

வலம்வருவோம் விண்ணில் இருவரும்
களம்காண்போம் காதலுடன் போர்புரிய !
காலைமுதல் மாலைவரை கழித்திடுவோம்
களிப்புடனே வாழ்ந்திருக்க வழிவகுப்போம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Oct-16, 9:54 pm)
பார்வை : 254

மேலே