அகந்தை

இருளை
விரட்டி
விட்டேன்
என்றே
விரைத்து
நின்ற
விளக்கின்
ஒளியை
காற்று
வந்து
கண்ணம்
அறைந்து
கூறியது
இருளது
விலகவில்லை
உன்னை
விழுங்கி
உள்ளது
என்று,
அகண்ட
இந்த
பிரபஞ்சத்தில்
என்
பங்கு
இருளை
அடையாளப்
படுத்துவது
மட்டும்
என்பது
அப்பொழுது
தான்
புரிந்தது,
என்
இறுமாப்பு
அடங்கியது,
நான்
என்ற
அகந்தையும்
விலகியது.
#SOF_SEKAR