வான் மேகங்களே,

வான் மேகங்களே வாருங்களேன்
நான் உரைப்பதைக் கேளுங்களேன் ..
பாவமென்ன செய்தார்கள் எம்மக்கள்
கால்வயிற்றுக் கஞ்சிக்கே வழியின்றி
கடன்தொல்லை நெருக்கடி தாங்காது
கயிற்றில் தொங்கிடும் நிலைக் காண்க !
காலமிலா காலங்களில் பெய்வதாலும்
பயனில்லை நம்பியுள்ள விவசாயிக்கு !
ஒருகுடம் தண்ணீருக்கு ஒருமணிநேரம்
காத்திருக்கும் காட்சிகளே நாளுமிங்கு !
தமிழன் என்றாலே தவிக்கும் நிலைதானா
தவறென்ன புரிந்தான் தரணியில் பிறந்ததா !
பரிதவிக்கும் உயிருக்கு உதவிடும் உள்ளமவன்
பசித்திருக்கும் நிலைக்காண வந்திடு நீயுமிங்கு !
பகிர்ந்திடும் எண்ணமே இல்லாதவர் பக்கத்தில்
இயற்கை அன்னை இயல்பாக அளித்திடும் நீரை !
இருந்ததை கொடுத்திட்டு வருந்திடும் நிலையிங்கு
வந்திடு வேகமாய் வாடிடும் தமழர்க்கு உதவிடவே !
கவிதைகண்டு கசிந்துருகி வந்திட்டான் வான்மேகம்
கைபிடித்து அளித்திட்டான் வாக்குறுதியும் எனக்கு !
திரும்பிடுவேன் விரைவில் தீர்த்திடுவேன் குறையை
களைந்திடு கவலையை தொடர்ந்திடு வேலைகளை
என்றவன் கூறியதை நானும் ஏற்றேனே வேதமாய் ....
பழனி குமார்