வான் மேகங்களே,

வான் மேகங்களே வாருங்களேன்
நான் உரைப்பதைக் கேளுங்களேன் ..

பாவமென்ன செய்தார்கள் எம்மக்கள்
​கால்வயிற்றுக் கஞ்சிக்கே வழியின்றி
கடன்​தொல்லை ​நெருக்கடி தாங்காது
கயிற்றில்​ தொங்கிடும் நிலைக் காண்க !

காலமிலா​ காலங்களில் பெய்வதாலும்
பய​னில்லை நம்பியுள்ள விவசாயிக்கு !
ஒருகுடம்​ தண்ணீருக்கு ஒருமணிநேரம்
காத்திருக்கும் காட்சிகளே நாளுமிங்கு !

தமிழன்​ என்றாலே தவிக்கும் நிலைதானா
தவறென்ன புரிந்தான் தரணியில் பிறந்ததா !
பரிதவிக்கும் உயிருக்கு உதவிடும் உள்ளமவன்
பசித்திருக்கும்​ நிலைக்காண வந்திடு நீயுமிங்கு !

பகிர்ந்திடும் எண்ணமே இல்லாதவர் பக்கத்தில்
இயற்கை அன்னை இயல்பாக அளித்திடும் நீரை ​!
இருந்ததை​ கொடுத்திட்டு வருந்திடும் நிலையிங்கு
வந்திடு வேகமாய் வாடிடும் தமழர்க்கு உதவிடவே !

கவிதைகண்டு கசிந்துருகி வந்திட்டான் வான்மேகம்
கைபிடித்து அளித்திட்டான் வாக்குறுதியும் எனக்கு !​
திரும்பிடுவேன்​ விரைவில் தீர்த்திடுவேன் குறையை
களைந்திடு​ கவலையை தொடர்ந்திடு வேலைகளை
என்றவன் கூறியதை நானும் ஏற்றேனே வேதமாய் ​....

​​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Nov-16, 9:10 pm)
பார்வை : 194

மேலே