தினமணி கவிதைமணி தந்த தலைப்பு அழுத கண்ணீர் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

அழுத கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

சென்ற வருடம் மழை வெள்ளம் வந்து
சென்னையை அழ வைத்தது !

இந்த வருடம் புயல் வேகமாக வந்து
சென்னையை அழ வைத்தது !

இயற்கையின் சீற்றம் கண்டபின்னும்
இன்னும் திருந்தாமல் இருக்கலாமா ?

மலைகளை வெடி வைத்து தகர்த்து
மலை போல கற்களை விற்பதை நிறுத்து !

மணலை ஆற்றில் அளவின்றி எடுத்து
மண் வண்டியில் ஏற்றுவதை நிறுத்து !

நிலத்தடி நீரை மின்சாரக் கருவிகளால்
நிர்மூலம் ஆக்குவதை முதலில் நிறுத்து !

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அளவின்றி சிதைப்பதை உடன் நிறுத்து !

நானே பெரியவன் என்ற அகந்தை அகற்று
நானிலத்தில் இயற்கையே பெரிது உணரு !

இயற்கையை நீ சிதைக்கச் சிதைக்க
இயற்கை உன்னை சிதைக்கும் உணர்ந்திடு !

அழுத கண்ணீர் போதும் இனி ஒருபோதும்
அழக்கூடாது அன்புகாட்டு இயற்கையிடம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Dec-16, 5:35 pm)
பார்வை : 67

மேலே