அவள் வருவாள் என

உன்னை மட்டும் பார்த்து
உயிர்கொடுக்க நினைத்தேன்!
உன் நடையசைவை பார்த்து
உள்ளுக்குள்ளே சிலிர்த்தேன்!

நேற்றிருந்த நேரங்கள் நேற்றோடுமுடியும் - இனி
வருங்காலம் அவள்பெயரை உச்சரித்தே விடியும்!



இதழோரம் அவள் சிரிக்க
இறகெனக்கு முளைக்கிறது!
விழியோடு அவள் பார்க்க
விண்தாண்ட நினைக்கிறது!

நேற்றுதான் நிலவிற்கு அவளோடுசென்றேன் - அங்கு
விண்மீன்கள் முன்னாடி நிச்சயம் செய்தேன்!


வாவென்று நீசொன்னால்
வாழ்க்கையே தருகிறேன்!
போவென்று நீசொன்னால்
புலம்பிக்கொண்டே இறக்கிறேன்!

என்காதல் பதில்சொல்ல அவளிங்கு வேண்டும்-ஜீவன்
அதுவரை உயிரற்ற பிணமாக வாழும்!

எழுதியவர் : (14-Jan-17, 7:30 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 273

மேலே