மூடன்
" வெறுங்கை
என்றால்
பல வீனம்
பத்து
விரல்கள்
தான்
மூலதனம் "
.........சுவற்றில் ..!
மிக அருகிலே ...
மரண பிடியில்
சுருக்கு கயிற்றில்
நா தழுதழுக்க ...
" நான் ஏன் இந்த பூமிக்கு பாரமாய் ........?"
" சாவது சரிதான் ...!"
பூமியை
உதைத்தும்
மிதித்தும் .......
மூடன் .......
சுவற்றை
நோக்காமலே ......!