சிந்தை நிறையழகே

உள்ளத் திரை முழுதும்
உந்தன் நல்முகம் நிறைகையிலே,
ஆழிப் பவளங்களாய்
நான் ஆழத் தொலைந்திருந்தேன்!

பக்கம் நெறுங்கியிவள் அந்தமறிகையிலே ,
கொக்கின் அலகிடையே
கயலாய் நான் இன்பத்துயரடைந்தேன்!

ஆசைக் குளத்தினின்று
நீ ஏக்கங்களள்ளி வந்து,
உச்சந்தலை நனைத்தாயென யாரிடம் புலம்புதலொ?
என் சிந்தை நிறையழகே!
-தமிழ்ப் பாமரன் ரா.பெருமாள்

எழுதியவர் : தமிழ்ப் பாமரன் ரா.பெருமாள (3-Apr-17, 10:40 pm)
பார்வை : 122

மேலே