கிறுக்கியின் கிறுக்கல்கள் - 01

நின் முத்தத்தில்
மூர்ச்சையடைந்து விடுகிறது
என் "முகப்பருக்கள்"

என் கூந்தலை நுகரும்
உன் நாசியின் சுவாசத்தில்தான்
மலர்கிறேன் நான்..!!

என் எதிரில் நீ நிற்க
எட்டி எட்டி பார்த்தும்
என்னருகில் நெருங்கி வர
அனுமதியின்றியும் என்னை
அண்டிக்கொள்(ல்)கிறது
“நாணம்”

மலர்ந்து உதிரும்
என் வெட்கத்திற்கு
உரமாகிவிடுகிறது
உன் “உரசல்கள்"

நின் நிறம்தனில் கர்வம்
கொண்டு களிக்கிறது
"கார்மேகங்கள்"

வெட்கத்தில் சிவக்க
வைத்து பின்பு கொய்தும் விடுகிறாய்..!
நீ கொய்தபின்புதானே
மலர்கிறது என் இதழ்கள்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-May-17, 3:43 pm)
பார்வை : 164

மேலே