தேகம் கண்டு

தேகம் கண்டு வரவில்லை,
உன்தன் மீது காதல்;
நேசம் மட்டுமே,
என்தன் ஒற்றை ஆவல்,,,
_
கற்பணையும் சிலகணம் தோன்றுதடி;
அத்தனையும் மறுகணம் விழிக்கொண்டு சாய்க்கின்றாயடி,,,
_
உந்தன் விழியின் ஒரம் கண்ணீர் துளி காணும் வகையில்;
எந்தன் பாதை என்றும் மாறாதடி,,,
_
தலை மடியில் சாயும் நேரம்;
தோள்கள் உன்னை சுமக்கும் போதும்;
இருவரும் குழந்தை ஆனோமடி,,,
_
உன்விரல் பிடித்திடும் வரம் கிடைக்க,
எத்தவம் செய்தேனடி..........

எழுதியவர் : வாசு செ.நா (16-May-17, 1:33 pm)
Tanglish : thegam kandu
பார்வை : 143

மேலே