காதல் , அழகு
உன் மௌனத்திரையை
உடைத்தெறிய மறந்து விட்டேன்.
*****
கரைத்தாண்டி நீ இருந்தாலும்
காற்றோடு பேசு
என் காதுகள் கேட்கும்.
விழிகளிலே மிதக்கிறாய்,
உயிரைப்பறிக்கிறது உன் புன்னகை,
உணர்வுகளை உடைக்கிறாய்.
பாதங்கள் பயணிக்க மறுக்கிறது
நவீன முறையில் உன் -
நினைவுகள் தரும் ரணத்தோடு..
பிறந்தாலும்,இறந்தாலும்
உனக்காக வேண்டும்.
உன்னோடு என்னை
சேர்த்துக்கொள் -இல்லை
உயிரோடு என்னை புதைத்துக்(கொள்).
நீ யார் என்று தொடங்கிய பயணத்தில்
நான் யார் என்றே
தெரியாமல் போகிறேன்..