என் மகள்

எந்தன் வழி வந்த புள்ள
நெருங்கி நீயும் வாயேன்டி
உச்ச வலி தந்த உள்ள
முத்தம் ஒன்னு தாயேன்டி
நீ விழி திறந்து பார்க்கையில
அறுத்த வலி மெல்ல அடங்குதடி
உன் உதட்டு ஓர சிரிப்பினிலே
கொதிச்ச உதிரம் கூட உறையுதடி
எட்டு வைச்சு நீ வந்தா
என் ஈரகொல குளிர்ந்து போகும்
ஒத்த சொல் பேசி பாரு
சிறுக்கி மனசு சிலிர்த்து போகும்
உன் காதோர மச்சம் பார்த்தே
இமையை இமைக்க மறந்து போனேன்
நீ அழுதஓசை அதை கேட்டே
நா பெத்த வலி தீர்ந்து போனேன்..


வினோ...

எழுதியவர் : வினோ.... (4-Jun-17, 8:04 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : en magal
பார்வை : 828

மேலே